அதிரை PFI நகர செயற்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல்! வன்மையாக கண்டிக்கத்தக்கது!


அதிரை டுடே:ஜுன்.02
அதிரையை சேர்ந்த முஹம்மது தம்பி. இவர் பாப்புலர் ஃப்ரண்டின் நகர செயற்குழு உறுப்பினர் ஆவார்.இவர் பல ஆண்டுகளாக அதிரையில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகளில் இவரின் பங்களிப்பு சிறப்பானது.

சுகாதாரத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் பல இடங்களில் இவரின் சேவைக்காக பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.

இவரின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி காரர்கள் அரசியல் ஆதாயத்திற்காக நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றுள்ளனர்.

அதிரையை சேர்ந்த அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி அஜீஸ் என்பவர் நேரடியாக இவரிடம் "நீ முஹல்லாவுடன் சேர்ந்து செய்யும் பணிகளை நிறுத்த வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்" என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்காக தி.மு.க வை சேர்ந்த முன்னாள் சேர்மனும் எங்களுடன் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

இதை பாப்புலர் ஃப்ரண்ட் வண்மையாக கண்டிப்பதுடன் மேலும் அதிமுக மாவட்ட நிர்வாகம் இது விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றோம்.

S.முஹம்மது ஜாவித்
நகர தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
அதிரை நகரம்.

Post a Comment

0 Comments

'/>