அதிரை கீழத்தெரு சங்கம் அமைப்பின் சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு

அதிரை டுடே.மார் 14
அமீரக அதிரை  கீழத்தெரு சங்கம்  அமைப்பின் சார்பில், புதிய நிர்வாகிகள் தேர்வு துபையில் 
(தேரா பூர்ஜ்முரார்)13.03.2020 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அமீரகத் முன்னாள் நிர்வாகி பி.ஓ. பக்கிர் முஹம்மது  தலைமை வகித்தார். அமீரகம்  கீழத்தெரு நிர்வாகிகள், முஹல்லாவாசிகள் முன்னிலை வகித்தனர்.
பின்னர் , நிதி நிலை அறிக்கையை  அமீரக கீழத்தெரு முன்னாள் பொருளாளர் மர்ஜுக் சமர்பித்தார். இதையடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020 மார்ச் வரை  கீழத்தெரு சங்கம் ஆற்றிய சேவை, செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி எடுத்துரைக்கப்பட்டன. மேலும், துடிப்புடன் பணியாற்றிய அமீரகம் மற்றும் அதிரை கிழத்தெரு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில், அமீரகம் கீழத்தெரு  சங்கத்தின் தலைவராக  T.ஹைதர்அலி, துணைத் தலைவராக S. முகமது ரியாஸ் கான், செயலராக S. ஹபிப் ரஹ்மான், துணைச் செயலர்: M.முகைதீன்அப்துல் காதர், பொருளாளராக.S.அஹமது ஜவாஹிர், துணை  பொருளாளராக .K  அல் கலிஃபா  ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில், அமீரக வாழ் கீழத்தெரு முஹல்லாவாசிகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக  நன்றியுரை  முன்னால் அமிரக துணை செயலாளர் K. ஷேக் தாவூது  அவர்கள் நன்றி தெரிவித்து கூட்டத்தை  முடித்து வைத்தார்.

துபையில் கீழத்தெரு புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு (படங்கள்)




தகவல் : கீழத்தெரு  முஹல்லா சகோதர்





Post a Comment

0 Comments

'/>