அதிரை டுடே:செப்.10
அதிரையில் இன்று (10/09/2020) காலை 9 மணிக்கு அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறக்கப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி இமாம் இப்ராஹிம் மௌலானா அவர்கள் கிராத் ஓத பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூவர்ணக் கொடியை தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன் அவர்கள் ஏற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை அலுவலகத்தை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவர் எம் எஸ் எம் அபுபக்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல செயலாளர் S.ரஷீத் அஹ்மது அவர்களும் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் A.அபூபக்கர் சித்தீக் அவர்களும் கலந்து கொண்டனர்.
அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகளும் ஜமாத்தார்களும் அனைத்து கட்சி மற்றும் இயக்களின் நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
இப்படிக்கு,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
அதிரை நகரம்.
0 Comments