பதவி உயர்வு பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்ட சார் ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள்:



அதிரை டுடே: ஜூன்,29

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ள தஞ்சாவூர் மாவட்ட சார் ஆட்சியர் அவர்களை தஞ்சை தெற்கு  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகூறினர்..

தஞ்சாவூர் மாவட்டத்தில்  சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த
திரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்கள் மக்கள் நல்வாழ்வு  மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலராக பதவி உயர்வு பெற்று செல்வதையடுத்து அவர்களை மரியாதை நிமித்தமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

அதுசமயம் சுகாதாரத்துறை இணைச் செயலாளராக பதவியேற்க இருக்கும் திரு. A.R  கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்களுக்கு மாவட்ட தலைவர்
A. ஹாஜா அலாவுதீன் M.Sc அவர்கள் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி Z. முஹம்மது தம்பி B.A.,B.L., அவர்கள் இலக்கியச் சோலை வெளியீடான அதிரை அஹ்மத் எழுதிய 'நபி வரலாறு' புத்தகத்தை வழங்கினார்.
மேலும் அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

'/>