அதிரை டுடே:ஜூன்.20
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக பொறுப்பேற்றிருக்கும் திரு எஸ் செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் இன்று மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
சந்திப்பின்போது மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன்.MSc பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் z.முகமது தம்பி BABL., மற்றும் பட்டுக்கோட்டை யூனிட் தலைவர் A.T.அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள் குறித்த கையேடு டிஎஸ்பி அவர்களுக்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் z.முகமது தம்பி BABL., அவர்களால் வழங்கப்பட்டது.
இவண்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தஞ்சை தெற்கு மாவட்டம்
0 Comments