வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது :உயர்நீதிமன்றம் அதிரடி

அதிரை டுடே.பிப் 02
நீர்நிலை ஆக்கிரமிப்பில் வீடு கட்டியவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில்
சேர்க்கக் கூடாது :உயர்நீதிமன்றம் அதிரடி


நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என, தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் நீர்நிலைகள் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது, உள்ளாட்சி வரைபட அனுமதி அளிக்கக்கூடாது, ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு வரி வசூலிக்கக்கூடாது, ஆக்கிரமிப்பு கட்டட உரிமையாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது, அரசின் நலத் திட்ட உதவிகளையும் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில்


நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கடந்த 2017-இல் சிஏஜி அளித்த வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று  தமிழக அரசின் தலைமைச் செயலர் பிப்ரவரி  11ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

 
தமிழக மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்நிலைகளின் மூல வரைபடங்களின் நகல்களை சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும், மின் வாரியத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும் பிப்ரவரி  8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எந்தவிதமான கட்டடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கக்கூடாது என்பதை மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது என்பதை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக்கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து தமிழக நீர்மேலாண்மை உயர்மட்ட திட்ட குழு பொறுப்பாளர் திரு தனுவேல்ராஜ் முத்துக்காத்தன் அவர்களிடம் நமது அட்மின் மீடியா விற்க்கு அளித்த பேட்டியில்

நாம் பல ஆண்டுகளாக தமிழக நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும் என்று போராடி வருகின்றோம்

கடுமையான சட்டம்  வந்தால் தான் நீர் நிலைகளை பாதுகாக்க முடியும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் நீர் நிலைகளை நாம் விட்டு செல்ல முடியும் மேலும் இத்தைகைய தீர்ப்பு அளித்த  உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு எங்கள்  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, உடனே இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம் என கூறினார்

Post a Comment

0 Comments

'/>