அதிரை டுடே.ஜன 27
மேற்கு வங்க சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இம்மசோதாவை இன்று பிற்பகல் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் 4-வது மாநிலம் மேற்கு வங்கம் ஆகும் இதற்கு முன்னதாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
0 Comments